Friday, April 29, 2011

ஸஹ நாவவது ஸஹனௌ பு3னக்து



வேதங்களை ஓதும் போது தொடக்கத்திலும் இறுதியிலும் சாந்தி பாடம் என்று சில மந்திரங்களை ஓதுவார்கள். அதில் ஸஹ நாவவது என்று தொடங்கும் இந்த சாந்தி பாடம் மிகவும் பிரபலம்.

ஓம் ஸஹ நாவவது ஸஹனௌ பு3னக்து
ஸஹ வீர்யம் கரவாவஹை
தேஜஸ்விநாவதீதமஸ்து
மா வித் விஷாவஹை
ஓம் சாந்தி சாந்தி சாந்தி


ஓம்



ஸஹ நாவவது - அது எங்கள் இருவரையும் (அனைவரையும்) காக்கட்டும்



ஸஹனௌ பு3னக்து - அது நாங்கள் இருவரும் (அனைவரும்) விடுதலையின் பேரின்பத்தை அனுபவிக்கும்படி செய்யட்டும்



ஸஹ வீர்யம் கரவாவஹை - சாஸ்திரங்களில் எங்கள் இருவரின் (அனைவரின்) திறமை மேன்மேலும் பெருகட்டும்



தேஜஸ்விநாவதீதமஸ்து - எங்கள் படிப்பு மிகவும் ஒளியுடையதாகட்டும்



மா வித் விஷாவஹை - நாங்கள் யாரிடமும் மனவேறுபாடின்றி இருக்க அருளட்டும்




ஓம் சாந்தி சாந்தி சாந்தி


4 comments:

ranjana said...

அற்புதமான விளக்கங்கள்.தொடர்ந்து பல ஸ்தோத்திரங்களை ,விளக்குங்கள்.நன்றி.

குமரன் (Kumaran) said...

நன்றி ரஞ்சனா.

Unknown said...

Great service sir, very usefull for person like me, Sir kindly give me Athiya hiruthayam Tamil meaning .

Unknown said...

haribaskar.nandagopal@gmail.com